பணம் இருந்தால் பாமர மனிதனும் மாளிகையில் இருக்கலாம்
பணம் இல்லையென்றால் பணக்காரனும் படும் பிச்சைகாரனாகலாம்
பணம் இருந்தால் உன்னை சுற்றி பல பேர்
பணம் இல்லையென்றால் நீ பல பேரை சுற்ற வேண்டும்
பணம் இருந்தால்தான் காதலி கூட உன்னுடன் இருப்பாள்
பணம் இல்லையென்றால் கட்டிய மனைவி கூட கண்டுகொள்ளமாட்டாள்
பணம் இருந்தால் பந்தபாசம் உன்னோடு
பணம் இல்லையென்றால் எல்லாம் பகல் கனவாய் போகும்
பணம் இருந்தால் பத்து விரலுக்கும் பத்து மோதிரம்
பணம் இல்லையென்றால் பத்து விரலுக்கும் சேர்த்து ஒரு பாத்திரம்
பணம் இருந்தால் பாசத்தோடு பார்க்கும் கண்கள்
பணம் இல்லையென்றால் பாவமாய் பார்க்கும் கண்கள்
பணம் இருந்தால் எவ்வளவு அசிங்கமாய் இருந்தாலும் எல்லோருக்கும் அழகாய் தெரிவாய்
பணம் இல்லையென்றால் எவ்வளவு அழகாய் இருந்தாலும் அசிங்கமாய் தெரிவாய்
பணம் இருந்தால் உன்உறவை பிரிய மனம் இல்லாமல் அழும் உறவுகள்
பணம் இல்லையென்றால் சுடுகாடு கூட உன் வரவை ஏற்க மறுக்கும்.
- ஜெ. தசரதன்
No comments:
Post a Comment